search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிசான் நிறுவனம்"

    நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஷ், டோக்கியோ போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Nissan #CarlosGhosn
    டோக்கியோ:

    ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருபவர் கார்லோஸ் கோஷ். நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இவரை, விசாரணைக்கு பின்னர் டோக்கியோ போலீசார் நேற்று கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிதி முறைகேடு மற்றும் வருமானத்தை குறைத்து காட்டிய புகார் தொடர்பாக கார்லோஸ் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் ஜப்பானைச் சேர்ந்த என்.எச்.கே. வானொலியும் மற்றும் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

    நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்லோஸ் கோஷ், மீது கூறப்பட்ட புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரும், பிரதிநிதித்துவ இயக்குனர் கிரேக் கெல்லியும் நீண்ட காலமாக முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  #Nissan #CarlosGhosn
    ஊக்கத் தொகையை வழங்குவதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்ததையடுத்து, அரசுக்கும் நிசான் நிறுவனத்துக்குமிடையே வழக்கில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. #NissanMotors #NissanDispute
    சென்னை:

    ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியது. இதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி நிசான் நிறுவனத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகை மற்றும் வரிச்சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

    இந்நிலையில்  தமிழக அரசு ஒப்புக்கொண்டபடி ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகள் என மொத்தம் 5000 கோடி ரூபாய் பாக்கியை தராமல் இழுத்தடிப்பாக நிசான் நிறுவனம் கூறியது. இதுதொடர்பாக 2016-ம் ஆண்டு பிரதமருக்கு நிசான் நிறுவனம் நோட்டீசும் அனுப்பியது. பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், நிசான் நிறுவனம், தமிழக அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.



    இந்த வழக்கில் தற்போது சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2008-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நிசான் நிறுவனத்துக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை 2000 கோடியை மட்டும் தமிழக அரசு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

    2019 இறுதிக்குள் 2000 கோடி ரூபாய் முழுமையாக தரப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும் நிசான் நிறுவனத்துக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என  தகவல் வெளியாகி உள்ளது. #NissanMotors #NissanDispute
    ×